• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடவள்ளியில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் – போலீசில் புகார்

March 22, 2019 தண்டோரா குழு

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறி அப்பகுதி குடியிருப்பு மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே கடந்த பல மாதங்களாக மசாஜ் மற்றும் அழகு நிலையம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடத்தப்படுவதாகவும், அதிகளவு ஆண், பெண்கள் என இரவு நேரங்களில் குடிபோதையில் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பெண்களும், குழந்தைகளும் அதிகளவு நிறைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இம்மாதிரியாக விசயங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க