• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு – கோவையில் சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் வேட்புமனு

March 19, 2019 தண்டோரா குழு

மக்கள் தான் எஜமானர்கள் நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

17 வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் துவங்கி விட்டன.தேர்தல் ஆணையம் தேதி அறிவிக்கபட்டதை தொடர்ந்து இன்று முதல் வேட்பு மனுக்கள் பெறபட்டு வருகின்றன.கோவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இன்று முதல் வேட்பு மனுவை காளபட்டி பகுதியை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் வசந்தகுமார் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் ராசாமணியிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார்,

பண பலதிற்க்கும், ஜாதிய அரசியலுக்கு அப்பாற்பட்டு புது முயற்சியாக இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளேன். மக்கள் என்னை நம்பி ஓட்டளிப்பாளர்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். நாடாளுமன்ற தேர்தல் வேலைகாரருக்கான தேர்வு எனக் கூறியுள்ளார்.

இவரது மனைவி சசிகலா பானு வழக்கறிஞராக உள்ளார். இவரது ஒரே மகன் சரண் பிரபு தனியார் கல்லூரி படித்து வருகிறார். இரண்டாவது விண்ணப்பமாக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் சி.டி.மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க