• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் 10 இலட்சத்து 64 ஆயிரம் பறிமுதல்!

March 18, 2019 தண்டோரா குழு

கோவை அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாலக்காடு – கோவை சாலையில் வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவரின், காரினை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

அப்போது அபிலாஷ் தனது நண்பர் மெர்வின் என்பவருக்கு அளித்து திரும்ப பெற்ற 10 இலட்ச ரூபாய் பணம் மற்றும் அவரிடம் இருந்த 64 ஆயிரம் பணத்தோடு கோவையில் உள்ள தனது நண்பரை பார்க்க வந்ததாக அபிலாஷ் தெரிவித்துள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை அளித்து பணத்தை திரும்ப பெறலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க