• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை விமான நிலையத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் !

March 18, 2019 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் உள்ள விமான நிலையத்தில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கால் டேக்சி நிறுவனத்தின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. முன்புறம் ஏற்பட்ட தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதையடுத்து உடனடியாக தீயனைப்பு துறையினருக்கு தகவல தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், கார் முழுவதும் எரிந்து நாசமாகியது. காரில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் என்பது தவிர்க்கபட்டது. விசாரணையில் காரை ஒட்டி வந்தவர் ராஜேஷ் என்பது தெரிய வந்து உள்ளது.

இதையடுத்து, கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க