• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேமுதிக வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்

March 18, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிக இணைந்தது. அக்கட்சிக்கு கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னை, திருச்சி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாளுமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். திருச்சி – இளங்கோவன் போட்டி, கள்ளக்குறிச்சி – எல்.கே சுதீஷ், விருதுநகர் – அழகர்சாமி போட்டி, வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க