• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு சிபிசிஐடி போலீசார் சோதனை

March 14, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் தலைமையிலான அதிகாரிகள் முதல்கட்ட ஆய்வு நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீடு ஆனைமலை சாலையில் உள்ள சின்னப்பன் பாளையத்தில் உள்ளது. இந்த பண்ணை வீட்டில் தான் இவர்கள் பாலியல் பலாத்காரத்துக்கு பெண்களை உட்படுத்தி உயிர் வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த பண்ணை வீட்டில் இன்று ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்பி நிஷா ஆகியோர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு முதற்கட்ட ஆய்வு நடத்தியது. அந்த பண்ணை வீட்டின் கதவு உடைக்கப்பட்டது காரணம் போன்றவற்றை விசாரித்து சென்றனர். இந்த ஆய்வு மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டிற்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இல்லை என்றால் அந்த வீட்டில் உள்ள சாட்சிகள் கலைக்கப்படலாம் என்ற கோணத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் 24 மணி நேரம் திருநாவுக்கரசன் பண்ணை வீடு காவல் பாதுகாப்பில் இருக்க ஐஜி ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க