• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்

March 12, 2019 தண்டோரா குழு

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு சில நேரங்களில், சிபிஐ வசம் வசம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்ப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பல, இந்த பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு கண்டனமும், ஆர்ப்பாட்டமும், ஆளும் கட்சி பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கை திசை திருப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண்ணின் சகோதரர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல் பரப்பபடுவதாக வேதனை தெரிவித்த அவர், தங்களது குடும்பத்தை களங்கப்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்பபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க