• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கம்ப்யூட்டர் பாபா சாமியார் நர்மதா நதி பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக நியமனம்

March 11, 2019 தண்டோரா குழு

நர்மதா நதி பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக கம்ப்யூட்டர் பாபா சாமியாரை மத்தியப்பிரதேச மாநில அரசு நியமித்துள்ளது.

நாம்தேவ் தாஸ் தியாகி ((Namdev Das Tyagi)) என்ற கம்ப்யூட்டர் பாபா, சிவ்ராஜ் சிவ்கான் தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சருக்குரிய அந்தஸ்தை பெற்றிருந்தார். நர்மதா நதியின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தற்போது கம்யூட்டர் பாபாவை நர்மதா நதியின் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நியமனம் செய்துள்ளது.ஆனால் அவருடைய அந்தஸ்து குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தனக்கு பொறுப்பு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி கூறிக் கொள்வதாக கம்ப்யூட்டர் பாபா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க