• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

March 11, 2019 தண்டோரா குழு

நடப்பாண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 112 பேரில் 58 பேருக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

இதில், மலையாள சினிமா நடிகர் மோகன்லால், சர்தார் சுக்தேவ் சிங் தின்சா, ஹூகும்தேவ் நாராயண் யாதவ் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருதுகளும், பங்காரு அடிகளார், நடிகர் பிரபுதேவா, டென்னிஸ் வீரர் ஷரத் கமல், செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா டிரோநவாளி,இசையமைப்பாளரும் பாடகருமான ஷங்கர் மகாதேவன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். மீதமுள்ள நபர்களுக்கு 16ம் தேதி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க