• Download mobile app
13 Jun 2025, FridayEdition - 3411
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

March 6, 2019 தண்டோரா குழு

கோவையில் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம், கடந்த 15 வருடங்கள் மிக அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.குறிப்பாக, கோவை அவிநாசி சாலையில் ஹிந்துஸ்தான் கலைக்கல்லூரியை துவங்கிய இந்நிறுவனத்தினர், இதன் அடுத்தபடியாக, கோவை மாலுமிச்சம்பட்டி பகுதியில் 1500 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசி சாலையில் மிகப்பெரிய மருத்துவமனை மற்றும் விவசாய நிலங்கள் டிராவல்ஸ்,கம்ப்யூட்டர் நிறுவனங்கள் வாங்கினர்.

இந்நிலையில், இன்று காலை 7.30. மணிக்கு கோவை அவிநாசி சாலை கல்லூரி, கல்லூரியின் தாளாளர் கண்ணையன், அவரது மனைவி சரஸ்வதி கண்ணையன், மகள் பிரியா உள்பட அனைவரது வீடுகள் மற்றும் அலுவலங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இச்சோதனையில் 500 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் மற்றும் பலகோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதும் சோதனைகள் தொடர்கிறது.

மேலும் படிக்க