• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

March 4, 2019 தண்டோரா குழு

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று சந்தித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.அதிமுக – பாஜக- பாமக, புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதியானது. அதைப்போல் திமுக,காங்கிரஸ்,விசிக, சிபிஐ, ஐஜேகே இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

தேமுதிகவை அதிமுக கூட்டணி இழுக்க முயற்சி செய்து வருகிறது.இதற்கிடையில், அண்மையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,திரையுலக பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேமுதிக உயர்நிலைக்குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு ஓ.பி.எஸ் சென்றுள்ளார். ஓ.பி.எஸ். உடன் அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயகாந்த் இல்லத்துக்கு வந்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க