• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மயங்கிய விழுந்த அமைச்சர்

February 26, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீரென மேடையிலேயே மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 35 வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் கலந்துக்கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, நிகழ்ச்சியின் உறுதிமொழியேற்பு போது அமைச்சர் அன்பழகன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்டு அருகில் இருந்த காவல் துறை உடனடியாக தண்ணீர், சர்க்கரை உள்ளிட்டவற்றைக் கொடுத்து அவரை தேற்றினர்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அமைச்சர் மயங்கியதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் திடீரென மேடையிலேயே மயங்கியதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க