• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாடு முழுவதும் உள்ள மலபார் கோல்டு நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

February 26, 2019 தண்டோரா குழு

கோவை உள்ளிட்ட 65 பிரபல மலபார் கோல்டு தங்க மற்றும் வைர நகை கடையில் வருமானவரித்துறை சோதனை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நாடு முழுவதும் 65 மலபார் கோல்ட் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதில், கோவை 100 அடி சாலையில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட் நிறுவனத்தில் அதிகாலை 7 மணி அளவில் மூன்று வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வருடம் இந்நிறுவனம் சார்பில் வரி ஏய்ப்பு நடந்ததாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து சென்னை, கோழிக்கோடு ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மலபார் கோல்டு
நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் மொத்தம் 250க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மலபார் கோல்டு நகைக்கடைகளில் இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை கிளைகள் உட்பட மொத்தம் 64 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் முடிவில் அந்நிறுவனம சார்பில் வரி ஏய்ப்பின் மதிப்பு குறித்து விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

அதிகாலை முதல் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக வாடிக்கையாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கடை ஊழியர்கள் இன்று யாரும் வேலைக்கு வர வேண்டாம் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க