• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி கைது

September 22, 2016 தண்டோரா குழு

டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் சோம்நாத் பாரதியும் அவரது ஆதரவாளர்களும் நுழைந்தனர். நிர்வாகத்தின் அனுமதியின்றி எய்ம்ஸ் வளாகத்தின் பாதுகாப்பு வேலி மற்றும் சுற்று சுவரை ஜெ.சி.பி., எந்திரத்தை கொண்டு சேதப்படுத்தினர். இதை தடுக்க சென்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாவலர்களிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்தநிலையில், இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் சோம்நாத் பார்தி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க