• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தி கைது

September 22, 2016 தண்டோரா குழு

டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 9 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் சோம்நாத் பாரதியும் அவரது ஆதரவாளர்களும் நுழைந்தனர். நிர்வாகத்தின் அனுமதியின்றி எய்ம்ஸ் வளாகத்தின் பாதுகாப்பு வேலி மற்றும் சுற்று சுவரை ஜெ.சி.பி., எந்திரத்தை கொண்டு சேதப்படுத்தினர். இதை தடுக்க சென்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாவலர்களிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது.

இந்தநிலையில், இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் சோம்நாத் பார்தி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க