நான் இனி உங்கள் சொத்து என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம்
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
” நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி சிந்தித்துக்கொள்ள வேண்டும். மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரா்கள் தான். நாட்டின் பிரதமா் என்பதை தோ்வு செய்யும் பெரும் பங்கு தமிழா்களுக்கு உள்ளது.
குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆனால் எனது குடும்பம் சற்று பெரியது. அதில் 8 கோடி மக்கள் உள்ளனா்” என்று இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு