• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? – அமித்ஷா கேள்வி

February 22, 2019 தண்டோரா குழு

ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? என பாஜக தேசிய தலவைர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி. பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிரவாதத்திற்கு இடம் அளிக்காது. தீவிரவாத செயலை பாஜக அரசு சகித்துக்கொள்ளாது. தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் யுத்தத்திற்காக இங்கே நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வலிமையாக பாஜக கூட்டணி போட்டியிடுகின்றன. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். திமுக-காங்கிரஸ் கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்த திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியுமா? தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக போராட வேண்டும்; வெற்றிக்கான சபதத்தை ஏற்போம். இந்தியாவிற்கு பல நல்ல தலைவர்களை கொடுத்த பூமி தமிழகம். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க பா.ஜ.க தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க