February 22, 2019
தண்டோரா குழு
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பொதுத்தேர்வு என்றும் கிடையாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது; பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. ஏற்கனவே நடப்பாண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கிடையாது என்று அறிவித்திருந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு வருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த ஆண்டு அடுத்த ஆண்டு என்று கிடையாது, என்றும் வராது என திட்டவட்டமாக பதிலளித்தார்.