• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை அரங்கநாதர் கோயிலில் உள்ள நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி பொதுமக்கள் புகார்

February 13, 2019 தண்டோரா குழு

கோவையை அடுத்த காரமடை பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் உள்ள நிர்வாகிகள் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி இந்து அறநிலையத் துறை உதவி ஆணையாளர் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையை அடுத்த காரமடை பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் இந்த வருட தேர்த் திருவிழா வருகிற 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த கோயிலின் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் , கணக்காளர் மகேந்திரன் உள்ளிட்டோர் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்வதாகவும், இதனால் தேர்த் திருவிழா முறையான வகையில் நடக்க வாய்ப்பில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள்
கோவையில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையாளருக்கு புகார் மனு அளிக்க வந்தனர்.

அப்போது அங்கு வந்த உதவி ஆணையாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு பேச்சவார்த்தைக்கு பிறகு சமாதானம் அடைந்தனர். உடனடியாக முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தேர்த் திருவிழா நடைபெறும் போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க