February 12, 2019
தண்டோரா குழு
கோவையில் விபச்சார பெண் புரோக்கர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குணியமுத்தூர் கோவைபுதூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவை குணியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனேஷ் குமார் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டை சோதனை இட்டதில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த தேவி (வயது 52) என்ற பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.