• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘கொங்கு மாவேள்’ விருது

February 6, 2019 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கோவை பேரூராதினம் சார்பில் கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியில் பேரூராதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் சாந்தலிங்கர் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாந்தலிங்கர் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டினார். அப்போது, கோவை பேரூராதினம் சார்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மாவேள் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதினை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகாளர் வழங்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்று கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

தரமான மருத்துவ சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சுகாதார துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி வருவதாக கூறிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் சுகாதார துறைக்கு தமிழக அரசு 62 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார். மேலும், மருத்துவ சுற்றுலா தளமாக தமிழகம் விளங்கி வருகிறது எனவும், மக்கள் அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற அதிகளவில் வருவதாகவும் அவர் கூறினார். சாந்தலிங்கர் மருத்துவமனையினால் சுற்றுப்புற மக்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பெற்று பயனடைவார்கள் எனவும், ஏழை, எளிய மக்களுக்காக சேவையாற்றுவது போற்றுதலுக்கு உரிய செயலாகும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க