சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று கோவை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக, கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பேரணி துவங்கியது. இதனை மாவட்ட ஆட்சி தலைவர் பொறுப்பில் உள்ள துறை ரவிச்சந்திரன் கொடி அசைத்து துவக்கி வைத்தர்.
இதில் வட்டார போக்குவரத்து ஊழியர்கள், வாகன விற்பனை முகவர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறை பயிற்சி மாணவர்கள் , தன்னார்வலர்கள் , என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாலசுந்தரம் சாலையில் துவங்கிய பேரணி, காந்திபுரம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. சாலை விதிகளை மதிப்போம், தலை கவசம் அணிய வேண்டும், குடி போதையில் வாகனத்தை இயக்க கூடாது , உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி பேரணியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்பட்டுத்தினர்.
முன்னதாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்