• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் சின்ன கூட்டத்தை பற்றி கவலைப்படவில்லை – தமிழிசை

February 4, 2019 தண்டோரா குழு

மக்களுக்கு திட்டங்களை ஆரம்பித்து விட்டு வளர்ச்சி பாதைக்கு தமிழகத்தை எடுத்து செல்லும் மோடி வேண்டுமா கிளர்ச்சி பாதைக்கும் எடுத்து செல்லும் கருப்புக்கொடி காட்டும் தலைவர்கள் வேண்டுமா என மக்கள் முடிவு செய்வார்கள் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் செல்ல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கோவை விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வரும் 10 ஆம் தேதி பிரதமர் வருவதை அடுத்து ஏற்பாடுகளை கவனிக்க திருப்பூரில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கலந்துக்கொள்ள உள்ளார். அனைத்து மாவட்டங்களுக்கும் பாராளுமன்ற தொகுதியை முன் வைத்து பல தலைவர்கள் வரவுள்ளனர். 12 ஆம் தேதி திருநெல்வேலிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தனாத், 14 ஆம் தேதி ஈரோட்டிற்கு அமித்ஷா, 15 ஆம் தேதி சென்னைக்கு நிதின் கட்காரி ஆகியோர் வாக்குச்சாவடி முகவரிகளை உற்சாகப்படுத்த உள்ளனர்.

ஸ்டாலின் சமீபத்தில் பேசியதாக வெளியான வீடியோவில் குறிப்பிட்ட மதத்தை, இந்துமதத்தின் நடைமுறையை அவமதிக்கும் வகையில் மிக மோசமாக கேவலமாக வார்த்தை பயன்படுத்தி உள்ளதாகவும், இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் ஓவியம் இடம்பெற்ற லயோலா விவகாரத்தில் வாய் திறக்காத இவர்கள், மற்ற மதத்தை இதுபோல் உதாசீனப்படுத்துவதில்லை
எனக் கூறினார்.

மேலும், பட்ஜெட்டில் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் 72 லட்சம் விவசாயிகள் பயன்பெற உள்ளனர். மம்தா பானர்ஜி வழக்கிலிருந்து வெளியே வருவதற்கு தான் அடுத்த முறை ஆட்சிக்கு வர நினைப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பின் அடிப்படையில் அதிக ஆதாரங்களோடு சிபிஐ அதிகாரிகள் வந்தால், மிக மோசமான சூழலை மம்தா உருவாக்கி வருவதோடு பெரிய கலாட்டா செய்து வருவதாகவும் குற்றச்சாட்டினார்.

சீப்பை எடுத்து ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று மம்தா, மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்று யோகி ஆதித்யனாத், அமித்ஷா ஆகியோர் ஹெலிகாப்டர் இறங்க அனுமதிக்காத செயலை சுட்டிக்காட்டியவர், என்னதான் செய்தாலும் வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரம்மாண்டமாக நடப்பதுடன் பாஜக வெற்றிப்பெரும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் சின்ன கூட்டத்தை பற்றி கவலைப்படவில்லை என்றும், யானையை பார்த்து சுண்டெலி தடுக்க முடியும் என்றால் எப்படி சாத்தியமாகும். ஜன்னி யாருக்கு என்பது ஸ்டாலின், வைகோ அவரது கூட்டணி கட்சிகள் உணர வேண்டும். முதல்வர் கனவு சனி என்று பிரதமர் என்று மாறி ஸ்டாலின் கனவில் உள்ளதாக விமர்சித்தவர், ஜன்னி மற்றவர்களுக்கு பிடித்ததாக யார் சொல்கிறார்களோ அவர்களுக்கு தான் ஜன்னி பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க