சிங்காநல்லூர் அருகே பட்டாக் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மாபெரும் கொள்ளை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியிருந்த கொள்ளை கும்பலை சிங்காநல்லூர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
கோவை சிங்காநல்லூர் ஜீ.வி. ரெசிடென்சி தண்ணீர் தொட்டி அருகே நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் சில வாலிபர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.
இவர்களை பார்த்த அந்தப் பகுதி மக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான வாலிபர்களை நோக்கி சென்றனர். அப்போது, உஷாரான வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து, உதவி ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் காவலர்கள் சுகுமார், பாலமுருகன், போஸ், அனீஸ், ஆகியோர் தப்பியோட முயன்ற ஏழு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அந்த மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகள், திருடப் பயன்படும் ராடுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அதேபோல, அவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் இவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், இவர்கள் கோவையில் பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, இந்த குழுவினர் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில், தற்போது அனைவரும் கூட்டாக சேர்ந்து பல்வேறு பகுதிகளில் வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக, இந்தப் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இவர்கள் நேற்று மாலை கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி கொண்டிருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட காவலர் ஒருவர் குற்றம் நடப்பதற்கு முன்பே குற்றவாளியை கைது செய்த நிலையில், மீண்டும் இதுபோன்று குற்றம் நடப்பதற்கு முன்பே கொள்ளை கூட்டக் கும்பல் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு