• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம் !

February 2, 2019 தண்டோரா குழு

சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷிகுமார் சுக்லாவை நியமித்து பிரதமர் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு கூறிக் கொண்டதால், இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக்வர்மா மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அலோக் வர்மாவை மீண்டும் பணிக்கு செல்லலாம் என உத்தரவிட்டது.

மேலும், அவரை பணியமர்த்துவது குறித்து சிறப்பு நியமன குழு தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தனது பிரதிநிதியாக நியமித்த நீதிபதி ஏ.கே. சிக்ரி ஆகியோர் கொண்ட மூவர் குழு உருவாக்கபட்டது. அக்குழு சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைத்து புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவித்தது.

இந்நிலையில், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக ஐ.பி.எஸ் அதிகாரி ரிஷிகுமார் சுக்லா நியமனம் செய்து பிரதமர் தலைமையிலான குழு அறிவித்துள்ளது. இவர் மத்திய பிரதேச மாநில காவல்துறை தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிபிஐ இடைக்கால இயக்குனர் பொறுப்பிலிருந்து நாகேஷ்வர் ராவ் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க