• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ச் 1 முதல் பெண்கள், குழந்தைகள் விடுதிகள் உரிமமின்றி இயக்க தடை

January 31, 2019 தண்டோரா குழு

மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் இல்லங்கள் ஒழுங்குபடுத்துதல் சட்ட விதிகளுக்கு மாறாக அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து முறைகேடான சான்றிதழ்கள் மூலம் விடுதிகள் நடத்த அனுமதி பெறப்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

மனுவை விசாரித்த மதுரை கிளை நீதிபதிகள், சட்ட விதிகளின் படி முறையாக மனுக்களை பரிசீலித்து தடையில்லா சான்று வழங்குவது குறித்து அதிகாரிகள் பிப்ரவரி 15க்குள்ளும், உரிமம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பிப்ரவரி 28-க்குள்ளும் முடிவெடுக்க உத்தரவிட்டனர்.

மேலும் மார்ச் 1 முதல் உரிமம் இன்றி விடுதிகள் இயங்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்க