• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகளை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த இளைஞரை கண்டித்த தந்தை மரணம்

January 30, 2019 தண்டோரா குழு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மகளை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்த இளைஞரை கண்டித்த போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் தாக்கியதில் பெண்ணின் தந்தை உயிரிழந்தார்.

அறந்தாங்கி பேராவூரணி சாலையில் உள்ள ரத்தினக்கோட்டை நரியங்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். விவசாய கூலி வேலை செய்யும் இவருடைய 2வது மகள் சரண்யாவிற்கு இளைஞர் ஒருவர் அடிக்கடி தன்னை திருமணம் செய்து கொள்ள தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.கடைவீதிக்கு சென்றபோது அங்கு நின்றிருந்த இளைஞரை பெண்ணின் தந்தை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட, அப்போது நெஞ்சில் பலமாக கையால் தாக்கப்பட்டதால் மயங்கி விழுந்த மகாலிங்கம், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு திரண்ட மகாலிங்கத்தின் உறவினர்கள், அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் தற்போது தலைமறைவாக உள்ள செல்வத்தை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க