• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

January 30, 2019 தண்டோரா குழு

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் கோரிக்கை அட்டை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த 21ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இருபத்தி ஒரு மாதகால நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 1000க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபடுவதாகவும் மீண்டும் மாநில கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க