• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதி அறிவிப்பு

January 29, 2019 தண்டோரா குழு

புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியாக 7 ஆயிரம் கோடி ரூபாய்யை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு சார்பில் கஜா புயல் நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு 13.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு 7,214 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் பியூஷ்
கோயல், வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், மேலும் சில மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

அக்கூட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள்,

கஜா புயல் நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு 13.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புயல் மற்றும் வறட்சியால் பாதித்த புதுச்சேரி, ஆந்திரா, உத்தரபிரதேசம், ஹிமாசலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களுக்கு 7,214 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவற்றில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநிலத்துக்கு 4,700 கோடி ரூபாய் வழங்கப்பட்டள்ளது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்துக்கு 949.49 கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஆந்திராவுக்கு 900.4 கோடி ரூபாய், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு 191.73 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க