• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் நீதிபதியாக சுமன் குமாரி பதவியேற்பு !

January 29, 2019 தண்டோரா குழு

பாகிஸ்தானில் சிவில் நீதிமன்ற நீதிபதியாக, சுமன் குமாரி என்ற இந்து பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், குவாம்பர் ஷாதாத்கோட் ((Qambar shahdadkot)) மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி. ஐதராபாத்தில் எல்எல்பி படிப்பை முடித்த அவர், கராச்சியின் ஜாபிஸ்ட் பல்கலையில், சட்டப்படிப்பில் மாஸ்டர் பட்டம் பெற்றார். இவர் அதே மாவட்டத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாகிஸ்தானில் நீதிபதியாக பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

ஏழை மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க சுமன் குமாரி விரும்பினார். சவாலான துறையை அவர் தேர்வு செய்துள்ளார். நேர்மையாகவும், கடினமாகவும் பணியை திறம்பட செய்வார் அவரது தந்தை நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். சுமன் குமாரியின் மூத்த சகோதரி மென்பொருள் பொறியாளராகவும், மற்றொரு சகோதரி ஆடிட்டராகவும் பணிபுரிகின்றனர்.

பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராணா பகவன்தாஸ் தான் அந்நாட்டின் முதல் இந்து நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க