கோவையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி முதலீட்டாளர்கள் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை காந்திபுரம் 6வது வீதி பகுதியில் சக்திவேல், சுதா தம்பதியினர் கோகுல கண்ணன் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். அதிக வட்டி தருவதாக கூறி தின வசூல் அடிப்படையில் 100க்கும் மேற்பட்டோரிடம் இந்நிறுவனம் தலா 2 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
2017 ம் ஆண்டே பண்ட் முடிந்துவிட்ட நிலையில் முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்ப கேட்ட போது நிதி நிறுவன உரிமையாளர்கள் காலம்தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. மேலும் பணம் கட்டியவர்கள் திரும்ப கேட்டால் அடியாட்களை கொண்டும் காவல்துறை உதவியோடும் அவர்களை மிரட்டியதாகவும் தொடர்ந்து புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்துள்ளது.
இந்நிலையில் இன்று பணம் தருவதாக அழைத்ததை அடுத்து அலுவலகத்திற்கு வந்த முதலீட்டாளர்களிடம் தற்போது பணம் தர முடியாது எனவும் வழக்கு நிலவையில் இருப்பதால் சில காலம் ஆகலாம் எனவும் நிதி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவிய நிலையில் பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா