• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னை மெரினாவில் சுழலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தத் சென்னை மாநகராட்சி முடிவு

January 28, 2019 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடம். பொதுமக்களுடைய வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுற்றி சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை சென்னை ரிப்பன் மாளிகைக் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை இரண்டாம் தளத்தில் அமையவுள்ளது.

மேலும் படிக்க