• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை மெரினாவில் சுழலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தத் சென்னை மாநகராட்சி முடிவு

January 28, 2019 தண்டோரா குழு

சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடம். பொதுமக்களுடைய வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான எட்டு இடங்களில் சுற்றி சுழலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை சென்னை ரிப்பன் மாளிகைக் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை இரண்டாம் தளத்தில் அமையவுள்ளது.

மேலும் படிக்க