• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்!

January 28, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

2019 மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அதிக காலம் பணிசெய்யும் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டி இருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் அவர்களின் சொந்த ஊர்களில் பணி நியமனம் செய்யப்பட கூடாது. 2019 மே 31 அல்லது அதற்கு முன் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணி செய்திருந்தால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க