• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு கொடி காட்டும் – வைகோ

January 26, 2019 தண்டோரா குழு

மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு காட்டும் போராட்டம் நடத்தப்படுமென, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

கோவை காந்திபரம் பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

நாளை மதுரைக்கு வரும் பிரதமர் மோடிக்கு மதிமுக கருப்பு கொடி காட்டும் என தெரிவித்தார். எய்ம்ஸ் அமைப்பதை மதிமுக எதிர்க்கவில்லை எனவும், ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்படுவதை கண்டித்து கருப்பு கொடி காட்டும் எனவும் அவர் கூறினார். மேலும் நஞ்சு வைத்த உணவில் தேன் வைப்பது போல மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கிறது. முல்லைபெரியாறு, மேகதாது அணை, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவற்றிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது எனவும், இந்த திட்டங்களினால் பொருளாதாரம் உயரும் என்றாலும், தமிழகம் அழிந்து விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை எனவும், தனது வாதத்தினால் தான் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் திறக்க அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க