• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? – முக.ஸ்டாலின் கேள்வி

January 26, 2019 தண்டோரா குழு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பழனிசாமி கவுரவம் பார்க்காமல் இறங்கி வந்து, அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ – ஜியோ அமைப்பினர் நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று இரவு பல்வேறு அவ்வமைப்பை பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது, மிரட்டுவது போன்றவை போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் கேடுதரும் வழிகள். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், பல காலமாக தங்கள் கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இந்த அரசு, அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது. நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்காமல், விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவதுடன், எச்சரிக்கை விடுவதில் மட்டும் தலைமைச் செயலர் கவனம் செலுத்துவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை விடுவிப்பதுடன், கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையை ஏவி இரவோடு இரவாக கைது செய்வது அராஜகத்தின் உச்சகட்டம்! அவர்களை நேரில் அழைத்துப்பேசி சுமூக தீர்வுகாண முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? இதில் என்ன கவுரவம்? என கூறியுள்ளார்.

மேலும் படிக்க