• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசிய கொடி ஏற்றி ரூ.49 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

January 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர் ஹரிஹரன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கங்கள், சிறப்பாக சேவையாற்றிய துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க