• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய கொடி ஏற்றி ரூ.49 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்

January 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் 70 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர் ஹரிஹரன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கங்கள், சிறப்பாக சேவையாற்றிய துறைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க