• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் 10% இடஒதுக்கீடு அமல் – மத்திய அரசு

January 24, 2019 தண்டோரா குழு

பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமூகப் பிரிவை அடிப்படையாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. இதற்கிடையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றபட்டது. மேலும் இதையடுத்து, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமானது.

இந்த இடஒதுக்கீட்டை நாட்டிலேய முதல் முறையாக குஜாராத் அரசு அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இந்த 10% இடஒதிக்கீடு திட்டத்தை அமல்படுத்த இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனையேடுத்து 10% இடஒதிக்கீடு திட்டத்தை பிப்ரவரி 1 தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

பிப்ரவரி 1 முதல் மத்திய அரசு பணிகளில் ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறும் போது பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவு சமூகத்தினருக்கு 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் படிக்க