• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை!

January 24, 2019 தண்டோரா குழு

கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

உ.பி.யின் தலைநகரான லக்னோவில் கோமதி ஆறு ஓடுகிறது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமாகக் கருதப்படும் இந்த நதியில் மாசு நிறைந்துள்ளது பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த ஆற்றை சுத்தம் செய்ய கோமதி அறு முன்னணி திட்டம் என்று உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் தொடங்கினார். இத்திட்டத்தில் உழல் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் நடந்த ஊழல் பற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐகோர்ட் நீதிபதி விசாரணை நடத்த கடந்த ஏப்ரல் 1ம் தேதி தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ மற்றும் நொய்டா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தானில் உள்ள அந்த நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் தஸ்தாவேஜ்கள் கைப்பற்றப்படலாம் என தெரிகிறது.
கோமதி ஆற்றை சுத்தப்படுத்துவதற்காக கடந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, கோமதி ரிவர் பிரண்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. கோமதி ஆற்றை சுத்தப்படுத்தும் இந்த திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக உத்தரப்பிரதேச மாநில பாசனத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தில் இன்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் படிக்க