• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்

January 24, 2019 தண்டோரா குழு

அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு உள்ளனர். இந்நிலையில் பேராசிரியர்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளதாகவும், எனவே உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் உள்ள அரசு கலை கல்லூரி மாணவர்கள் , கல்லூரி வாயிலின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வரும் அரசை கண்டித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க