• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்க 2 கும்கிகள் வரவழைப்பு !

January 24, 2019 தண்டோரா குழு

கோவையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியும் சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இரண்டு கும்கி யானைகள் கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வரப்பாளையம், சோமையனூர், சின்னதடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது நுழைவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து கடந்த மாதம் விநாயகன் என்ற கட்டு யானையை பிடித்த வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்தனர்.

இந்நிலையில், தற்போது சின்னத்தம்பி என்ற காட்டு யானையை பிடிக்கும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே இந்த யானையை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து முதுமலை என்ற யானையும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். யானை நடமாட்டம் இருக்கும் பகுதியை வனத்துறையினர் அறிந்து உள்ளதால் விரைவில் அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க