• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி!

January 23, 2019 தண்டோரா குழு

பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச கிழக்கு பகுதியில் பொதுச் செயலாளராக ராகுல் காந்தி நியமித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முக்கிய கட்சிகளுக்கும் அதற்கான ஆயுத்த பணியில் இறங்கியுள்ளன. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து வருகிறது. மறுபுறம் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியும் உருவாகிவருகிறது.

இதற்கிடையில், உத்திர பிரதேசத்தில் அகிலேஷ்-மாயாவதி கூட்டணியில் காங்கிரசுக்கு இடம் தரப்படவில்லை. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நியமித்துள்ளார். கூட்டணியில் இடம் கிடைக்காததால் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

காங்கிரசில் பதவி தந்தன் மூலம் பிரியங்கா நேரடியாக அரசியலுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க