• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் உருவாக்கியுள்ள கலாம் செயற்கைக்கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ சிவன்

January 22, 2019 தண்டோரா குழு

மாணவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள கலாம் செயற்கைகோள்கள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ சார்பில் சுமார் ரூ.14.35 லட்சம் காசோலையை இஸ்ரோ தலைவர் சிவன், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ சார்பில் மாணவர்களுக்கான இளம்விஞ்ஞானி பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இதுவரை ஜலந்தர் மற்றும் அகர்டாலா ஆகிய இரண்டு இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருச்சியில் பயிற்சி கூடம் அமைக்கப்படும். இதில் தமிழக மாணவர்கள் மட்டுமில்லாது, தென்னிந்திய மாணவர்களும் பங்கேற்ப்பர். பயிற்சியில் மாணவர்கள் தயாரிக்கும் செயற்கைக்கோள்கள் சோதனை செய்தபின் இஸ்ரோ பெற்றுக்கொள்ளும். வருங்காலங்களில் அவை விண்ணில் செலுத்தப்படும். தற்போது மாணவர்கள் உருவாக்கியுள்ள சிறிய ரக செயற்கைக்கோள்கள் கலாம் என்ற பெயரில் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுகிறது” எனக் கூறினார்.

மேலும் படிக்க