ஐதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசில் சிக்கும் நபர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு காவல்துறை கடிதம் அனுப்பிவருகிறது.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். பெரும்பாலான வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் இங்கு சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு இந்தியாவை பொறுத்த வரை பெரிய அளவில் தண்டனை வழங்கப்படுவது கிடையாது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு தற்போது மிகவும் வித்தியாசமான தண்டனைகளை வழங்க தொடங்கியுள்ளது ஐதராபாத் போக்குவரத்து காவல்துறை.
ஐதராபாத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த நூதன நடவடிக்கையை காவல்துறை கையில் எடுத்துள்ளது. அதன்படி, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர் பிடிபட்ட இடம், நேரம், தேதி அவரது பெயர், முகவரி, ஆகியவற்றை குறிப்பிட்டு அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு காவல்துறை தகவல் அனுப்பிவருகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் வேலையை கூட இழக்க நேரிடலாம். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பணியாளரை அவமானப்படுத்துவதோ அல்லது அவர் பணியாற்றும் நிறுவனத்தை அவர் மீது நடவடிக்கை எடுக்கவைப்பதோ தங்கள் நோக்கம் அல்ல எனக் கூறியுள்ள ஐதராபாத் காவல்துறை இது ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை என தெரிவித்துள்ளது.
இந்த தண்டனை வித்தியாசமானதாக பார்க்கப்பட்டாலும் கூட சற்று கடுமையாகதான் உள்ளது. இனி வருங்காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு