• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவு: பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

January 21, 2019 தண்டோரா குழு

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவிற்கு பிரதமர் மோடி பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் புகழ்பெற்ற மடம் சித்தகங்கா. மடத்தின் ஜீயராக உள்ளவர் சிவகுமார் சுவாமி. கடந்த 1941-ம் ஆண்டிலிருந்து இவர் துமக்கூரு சித்தகங்கா மடத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலமானார். அவருக்கு வயது 111.

ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா, எடியூரப்பா ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது. மேலும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமிஜி-யின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.

இந்நிலையில், சிவக்குமாரசாமியின் மறைவுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தகங்கா மடத்திற்கு சென்று மடாதிபதி சிவகுமார சுவாமிகளை சந்தித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். சித்தகங்கா மடத்தில் ஏராளமான சமூக பணிகளை செயல்படுத்தி வந்தவர் சிவக்குமாரசாமி என புகழாரம் சூட்டினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைந்தார் என செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் சமுதாயத்திற்காக பல சமூக பணிகளை மேற்கொண்டுள்ளார், கல்விக்காகவும் பெரும் பங்காற்றினார். அவரை இழந்து வாடும் அன்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க