• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை  அரசு பள்ளி ஆசிரியர் குடும்பத்துடன் தற்கொலை ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு

January 19, 2019

கோவையில் அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் . இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர்.

கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கிய தாஸ் என்பவர் இன்று குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அதில் தாய் புவனேஸ்வரி, மனைவி ஷோபனா, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து உள்ளார். இதையடுத்து,உயிரிழந்த 5 பேரின் உடல்களை கைப்பற்றி கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்தோணி ஆரோக்கிய தாஸ் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்கொலை செய்ததற்கான காரணத்தை எழுதி வைத்து உள்ளார்.

அக்கடித்தில், கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வலியால் துடித்து வந்ததால் உயிர் வாழ விருப்பமில்லை எனவும் குடும்பத்தை விட்டு செல்ல மனமின்றி அவர்களையும் கூட்டிக்கொண்டு செல்வதாகவும் எழுதியுள்ளார். எனவே தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனவும் அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க