• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்ற 6 பேரை பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

January 19, 2019 தண்டோரா குழு

டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு பணி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டிஜிபி பதவி உயர்வுக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாஃபர் சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ்சுக்லா, மிதிலேஷ்குமார், தமிழ்ச்செல்வன், ஆசிஷ் பெங்க்ரா ஆகியோரின் பெயர்களை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தது கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில், டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேருக்கு பணி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, டான்ஜெட்கோ ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை டிஜிபியாக ஸ்ரீலஷ்மி பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். அதைபோல், சிறைத்துறை டிஜிபியாக அசுதோஷ் சுக்லாவும், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை செயல்பாடு பிரிவு டிஜிபியாக ஆஷிஷ் பெங்ராவைவம், போலீஸ் அகாடமி திட்ட இயக்குநராக ஜாபர்சேட் ஐபிஎஸ்சையும் நியமித்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க