• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராம்குமார் கொலையில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை வேண்டும் – திருமாவளவன்

September 18, 2016 தண்டோரா குழு

ராம்குமாரின் மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் தலித் கலைவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ராம்குமாரின் மரணத்தில் வேறு பின்னனி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உடலை உடனடியாக அடக்கம் செய்து சம்பவத்தை மூடி மறைக்காமல் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

சுவாதி கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டது முதல்,தனக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என அவர் பலமுறை கூறியும் காவல்துறை அதனை அலட்சியம் செய்ததாகவும் அவர், பிளேடால் கழுத்தை அறுத்தது போன்ற காட்சிகளை வெளியிட்ட காவல்துறை ,கழுத்தை அறுத்தபோது ஏன் வீடியோ எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பிய திருமாவளவன்,கொலை சம்பவத்தில் கூலிப்படை தொடர்பு குறித்த விசாரணையை காவல்துறை தவிர்த்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும், இதேபோல் ஒருதலை காதல் மட்டுமே சுவாதி கொலைக்கு காரணமாக இருக்க முடியாது எனவும், இந்த ஐய்யத்தை போக்க வேண்டியது அரசின் கடமை என்றும் வலியுறுத்திய அவர் ராம்குமாரின் மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் உரிய விசாரணை வேண்டும் எனக் கூறினார்.

மேலும் படிக்க