• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , நீச்சல் மற்றும் படகு போட்டி

January 14, 2019 தண்டோரா குழு

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீச்சல் போட்டி , படகு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்குபெற்றனர்.

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூலூர் பகுதியில் உள்ள படகு இல்லத்தில் இளைஞர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் படகை வேகமாக செலுத்தி தங்களது இலக்கை அடைந்தனர். ஏராளமான பொதுமக்கள் போட்டிகளை கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க