• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் பாதிப்பால் பூக்களின் வரத்து குறைவு – விலை உயர்வு

January 14, 2019 தண்டோரா குழு

கஜா புயல் பாதிப்பு மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து குறைந்துள்ளதாக பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்வது வழக்கம். இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகை மற்றும் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ விலை நிலவரம் குறித்து கீழே பார்ப்போம்.

ஜாதி மல்லி ஒரு கிலோ ரூ.1500, (மற்ற நாட்களில் கிலோ ரூ.600க்கு விற்பனையாகும்) காட்டு மல்லி (காக்கரட்டான்) ஒரு கிலோ ரூ.800 (மற்ற நாட்களில் கிலோ ரூ300) செவ்வந்திப்பூ ஒரு கிலோ ரூ.150 (மற்ற நாட்களில் கிலோ ரூ.80) ரோஜாப்பூ ஒரு கிலோ ரூ.260 (மற்ற நாட்களில் கிலோ ரூ.120) கனகாம்பரம் பூ ரூ.1200 (மற்ற நாட்களில் கிலோ ரூ.600) அரளிப்பூ ஒரு கிலோ ரூ.300 (மற்ற நாட்களில் கிலோ ரூ.150) விச்சு பூ ஒரு கிலோ ரூ.120 (மற்ற நாட்களில் கிலோ ரூ.60)
கோழி கொண்டை பூ கிலோ ரூ. 80 (மற்ற நாட்களில் கிலோ ரூ.40)
மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.20

கடந்த மூன்று நாட்களாக இதே விலையில் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலையுயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க