January 12, 2019
தண்டோரா குழு
சிட்டிசன் வாய்ஸ் கிளப் மற்றும் சிட்டிசன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப் இணைந்து பற்று அட்டை, கடன் அட்டை குறித்து கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில், சிட்டிசன் வாய்ஸ் கிளப்பின் தலைவர் ஜெயராமன், ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் முருகானந்தம், உதவி பொதுமேளாளர் ராமானுஜம், சிட்டிசன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப்பின் இயக்குநர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிட்டிசன் வாய்ஸ் கிளப்பின் செயலாளர் சண்முகம் வரவேற்ப்புரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் சிட்டிசன் வாய்ஸ் கிளப்பின் தலைவர் ஜெயராமன் பேசுகையில்,
மாதாந்திர அறிக்கை குறித்த நேரத்தில் வாடிக்கையாளரை அடைவதில்லை. அதனால் அவர்கள் அபராதம் கட்ட நேரிடுகிறது. வட்டி. கட்ட வேண்டிய மொத்த தொகையின் ஒரு பகுதி செலுத்தப் பட்டிருந்தாலும், வட்டி கட்டிய தொகைக்கும் சேர்த்தே வசூலாகிறது. அதைபோல் காசோலைகள் பெரும்பாலும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் காசோலைகள் வந்து சேரவில்லை என்று இரண்டாம் முறையாக காசோலைகள் பெறப்படுகின்றன.
சிபிலில் வாடிக்கையாளருக்கு அவர்கள் நிலை எடுத்து சொல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும். இதில் ஒரு ஒளிவு மறைவு அற்ற நிலை வேண்டும். உணவகங்கள் மற்றும் கடைகள் விதிக்கும் 2% சேவை வரி சுமையைக் கண்டும் வங்கிகளின் பாராமுகம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்காத நிலை மாற வேண்டும். ஊக்க புள்ளிகள் இவற்றின் காலவரையறை குறைவு. வாடிக்கையாளர் அதை அறிவதில்லை அல்லது அறிய வரும் போது புள்ளிகளை தவற விடுகிறார்கள். வங்கிகள் மாறாக இந்த ஊக்கத் தொகையை தாமாகவே நிலுவையில் சேருமாறு ஏற்பாடு செய்ய வேண்டும். பற்று, கடன் அட்டைகளை தீவிரமாக வாங்கச் செய்வது. பின்னர் அத்துடன் காப்பீடு பத்திரத்தை இணைப்பது நியாயதிற்குப் புறம்பானது. அட்டைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும் போது வங்கிகள் விலகிக் கொள்கின்றன. டெலி காலிங் முறை பெரும்பான்மை வாடிக்கையாளர்களுக்கு கடினமாக உள்ளது. இதற்கெல்லாம் உதவும் வகையில் குறைகேள் அதிகாரி நியமனம் செய்யப்பட வேண்டும்.
பொதுமக்களுடன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு அரசாங்கத்துறையாக இருந்தாலும், 3 மாதத்திற்கு ஒரு முறை தன்னார்வ நுகர்வோர் அமைப்புடன் ஒரு கலந்தாலோசனை செய்தல் அவசியம். மின்சார வாரியம், ஆயுள் காப்பீடு போன்ற அனைத்து துறைகளுடனும் கலந்துரையாடல் நடக்கிறது. துரதிர்ஷ்டவசமாக பற்று மற்றும் கடன் அட்டை பயனாளிகளுக்கான அமைப்பு சென்னை மற்றும் கோவையில் இல்லை. இவை வெளியாட்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இது நடைமுறையில் அத்தனை பயனுள்ளதாக இல்லை. TRAI மற்றும் IRDA போன்றவற்றிற்கு நேரடியான ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. இது போல் பற்று மற்றும் கடன் அட்டைகளுக்கும ஒழுங்கு முறை ஆணையம் அமைப்பது அவசியம். இதற்கான கூட்டம் சம்பந்தப்பட்ட பற்று, கடன் அட்டை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இக்கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற பொதுமேலாளர் முருகானந்தம் சைபர் குற்றம் எளிதாக நடப்பதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது முகானந்தம் பேசுகையில்,
வெளிநாடுகளில் இருந்து அட்டை நாட்களைக் கவர்ந்து பணம் கொள்ளை அடிக்கப்படும் முறை பிஷ்ஷிங் எனப்படும். இதைத் தடுப்பதற்கு ஆன ஆலோசனைகள். ஆன்டி வைரஸ் செயலிகள், கை பேசியால் வரும் ஆபத்து, கடவுச் சொல் பாதுகாப்பு மேற்கண்ட விவரங்கள் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தார்.
ரிசர்வ் வங்கியின் ஓய்வு பெற்ற உதவி பொதுமேலாளர் ராமானுஜம் பேசுகையில்,
பத்திரங்களில் கையெழுத்திடும் முன் கவனமாக முழுவதும் படிக்க வேண்டும். எளிதாக கண்டறியக் கூடிய கடவுச்சொல் பயன்படுத்தக் கூடாது. கடன் அட்டை, பற்று அட்டை களை பாதகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் இருந்து மட்டுமே அட்டை வாங்க வேண்டும். பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் கணினி பக்கத்தில் இருந்து வெளியே வந்து விட வேண்டும். அட்டைகளுக்கான பணத்தை உரிய நேரத்தில் செலுத்தி விட வேண்டும் நுகர்வோராக உங்கள் உரிமைகளை கோருங்கள் என்றார்.
சிட்டிசன் கன்சியூமர் சிவிக் ஆக்ஷன் குரூப்பின் இயக்குநர் சரோஜா பேசுகையில்,
நுகர்வோர் வழிகாட்டி பற்றிய தகவல்கள் பதிவிட்டார். அதன் இரண்டு முக்கிய பிரச்சினைகளைப் பற்றிய தகவல்கள் சிபில் பற்று தகவல்கள் முறையாக கால நேரத்தில் பதிவு செய்யப்படுவதில்லை. நிலுவை செலுத்தப்பட்டதா என ஆராயாமல் அளவு கடந்த கடன்கள் அளித்தல். மேலும் அடுத்த கடன் பெற அணுகும் போது அவர் கடன் பெறுவதற்கான தகுதி சிபில் வாயிலாக ஆராயப்பட்டு கூடுதல் கடன் மறுக்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்க படவேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்றார்.
விழாவின் நிறைவாக சிட்டிசன் வாய்ஸ் கிளப்பின் இணை செயலாளர் எம்.எம் ராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.