• Download mobile app
14 Jul 2025, MondayEdition - 3442
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

January 11, 2019 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெளியூர் செல்லும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் இயக்கக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,

கோவை மண்டலத்தில் இருந்து மதுரை, திருச்சி, தேனி மற்றும் அதையும் தாண்டி செல்லும் ஊர்களுக்கு சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து 10ம் தேதி 200 நடைகளும், ,11ம் தேதி 300 நடைகளும், 12ம் தேதி 300 நடைகளும், 13ம் தேதி 400 நடைகளும், 14ம் தேதி 200 நடைகளும் ஆக மொத்தம் 5 தினங்களும் சுமார் 1400 நடைகள் மதுரை, திருச்சி, தேனி மார்க்கமாக சிறப்பு [பேருந்துகளை இயக்கவும் அதே சமயம் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாகவும் இயக்கப்படவுள்ளது.

அதேபோல் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், சென்னை ஆகிய ஊர்களுக்கு 10ம் தேதி 65 நடைகளும், ,11ம் தேதி 80 நடைகளும், 12ம் தேதி 80 நடைகளும், 13ம் தேதி 65 நடைகளும், 14ம் தேதி 55 நடைகளும் ஆக மொத்தம் 5 தினங்களுக்கு சுமார் 345 நடைகள் சேலம், சென்னை, மார்க்கமாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் அதேசமயம் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாகவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க அனைத்து பேருந்து நிலையங்ளிலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் அதிகாரிகளை நியமித்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க